இலங்கையில் போரின்போது நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இராணுவத்தினர் மூவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பை இரகசியமாக வழங்கவுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்க முடியுமா என்பதை ஆராய மரணதண்டனை விதித்த மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஜனாதிபதி அறிக்கைகளைப் பெறவும் தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் குறித்த தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.